Home » சாகித்ய அகாடமி விருது வேண்டாம்,இன்குலாப்  குடும்பத்தினர் அறிவிப்பு!!!

சாகித்ய அகாடமி விருது வேண்டாம்,இன்குலாப்  குடும்பத்தினர் அறிவிப்பு!!!

by admin
0 comment

சென்னை: சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று கவிஞர் இன்குலாப் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கிறது.

இந்நிலையில் கவிஞர் இன்குலாப்பின் ‘காந்தாள் நாட்கள்’ கவிதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவிஞர் இன்குலாபின் குடும்பம், சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக இன்குலாப் மகள் ஆமினா, சாகித்ய அகாடமியின் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கவிஞர் இன்குலாப் குரலற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அறியப்பட்டவர்.

அவருக்கான அங்கீகாரம் என்பது மக்கள் கவிஞர் என்பதாகவே இருக்கும். அரசு அளிக்கும் இதுபோன்ற அங்கீகாரங்களை அவரை தேசிய அளவில் கொண்டுசேர்க்கும்.
ஆனால், கவிஞர் இன்குலாப், தன் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை. `விருதுகளையும் கௌரவங்களையும் எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை’ என்பார்.

அரசின் முகங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அது ஒரே முகமூடியையே அணிந்திருக்கிறது. இன்றையச் சூழலில் வன்முறைகள் ஊக்கமாக நடக்கின்றன.

அதேபோல் வகுப்புவாதம், மதவாதம் மற்றும் ஒடுக்குதல் போன்றவையும் நடக்கின்றன.

கவிஞர் இன்குலாபின் படைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதுவே ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.

அந்தவகையில், கவிஞர் இன்குலாபின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த விருதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter