அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் நேற்று(07/07/2023) நடைபெற்ற இருபத்தொன்றாம் நாள் ஆட்டத்தில் ராயபுரம் 7s சென்னை அணியினரும் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ராயபுரம் 7s சென்னை அணி, முதல் கோலை அடித்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட பாலு மெமோரியல் திருச்சி அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது. இதனையடுத்து பாலு மெமோரியல் திருச்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை மாகாணம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) ஆட்டங்கள் கிடையாது.
நாளை மறுதினம்(10/07/2023) திங்கட்கிழமை விளையாட வேண்டிய அணிகள் :
காலிறுதி ஆட்டம் 1 :
தென்னரசு FC பள்ளத்தூர் vs ESC அதிராம்பட்டினம்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்