Wednesday, March 18, 2026

முத்துப்பேட்டை: ரயில்வேயிக்கு சொந்தமான இடத்தை அடைத்த ரயில்வே நிர்வாகம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை !

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள்,ஐக்கிய ஜமாத்தினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்,அப்போது உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு அந்த பகுதிக்கு செல்ல ஏதுவாக 2அடி மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத அதிகாரிகள் 1.5அடி மடுமே இடைவெளி விட்டு மீதமிருந்த பகுதியை அடைத்து சென்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது ரயில் ஓட்டுநர் பரிந்துரை பேரில் இந்த பாதையை அடைக்க உத்தரவிடப்பட்டது என்றும் இது போன்ற பாதைகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடப்பதாகவும்,குறிப்பாக கால்நடைகள் அதிகளவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பதாக தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img