Monday, December 15, 2025

அதிரையில் தொடரும் லோவால்ட்! கர்ப்பிணிகள், முதியோர்கள் அவதி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் மின் தடை , குறைந்த மின்சாரம் போன்ற பிரச்சனைகள் தொடர் வாடிக்கையாக உள்ளது. மாதம் ஒரு முறை பராமரிப்புக்காக மின் தடை செய்யப்படும், ஆனாலும் அறிவிக்கப்படாத மின் தடை கடந்த சமீப காலமாக நடந்துவருகிறது.

ஜூலை மாதம் பராமரிப்பிற்காக காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை என அறிவித்துவிட்டு, இரவு 8 மணிக்கு மேல் தான் மின்சாரமே கிடைத்துள்ளது.

இதுபோன்ற பிரச்சனைகள் அதிரை மின் வாரியத்தில் தொடர் கதையாகிவருகிறது. மின்சாரம் கிடைத்தாலும் LOW VOLTAGE, மின் அழுத்தம், மின் இணைப்பிலிருந்து 220 வோல்ட் மின்சாரம் கிடைப்பதற்குப் பதில் வெறும் 180, 195 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது. இதனால் மின்சாதனங்கள் பழுதாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

கோடை கால வெயில் மக்களை வாட்டியெடுத்த நிலையில் குறிப்பாக இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து மூன்று மாதங்களாகவே பல முறை தமிழ்நாடு மின்சார வாரியம், தஞ்சை மண்டல மின்வாரிய பிரிவு, பட்டுகோட்டை AE , அதிராம்பட்டிணம் AE அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது தொடர்ச்சியாக தொடர்கிறதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.

இதனை மின்சாரத்துறை அமைச்சர் தலையிட்டு பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நான் இச்செய்தியை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட மின் வெட்டு ஏற்பட்டுள்ளது ரொம்ப வேதனையாக உள்ளது.( நேரம் 1.54 Am)

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img