அதிராம்பட்டினம் நகரில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தெரு நாய்கள் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை நாய்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த நாய்கடியால் ரேபிஸ் எனும் கொடிய நோய் தாக்கும் அபாயயமும் உள்ளது, குறிப்பாக தினசரி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மாமிச கழிவுகளை உணவாக உட்கொள்ளும் தெரு நாய்கள் மனிதர்களையும் கடிக்க துவங்கி உள்ளது இதனை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அதிராம்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் நகர செயலாளர் பன்னீர்செல்வம் நகராட்சி ஆனையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதனை பெற்றுக்கொண்ட ஆணையர் விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.