Sunday, April 28, 2024

காவிரி விவகாரம்.. அதிரையில் முழு கடையடைப்பு போராட்டம்!!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவடாத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கவும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகளோடு வியாபாரிகளும் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து விவசாய சங்கங்கள், திமுகவின் விவசாய அணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...