Wednesday, March 18, 2026

ஒரே கலரில் 9 நாய்கள் ! அதிரை நகராட்சி எல்லையில் இறக்கி சென்ற மர்ம வாகனம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி விட்டது.

புளுகிராஸ் நாய்களை கொல்ல கூடாது என தடையாணை பெற்றுள்ளதால் நாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊசிகள் செலுத்தப்படுகிறது.

இது பல நகராட்சிகள் பேரூராட்சிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.

இதனால் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுகாங்காமல் போய் கொண்டுள்ளது. பொதுமக்கள் நாய்கள் குறித்த புகார் அளித்தால் கண் துடைப்பிற்காக அவைகளை பிடித்து அக்கம்பக்கத்து ஊர்களுக்குள் இறக்கி சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.

அதன் வரிசையில் இன்று இரவு அதிரைக்குள் நுழைந்த மர்ம டெம்போ ஒன்று ஒரே கலரில் 9நாய்களை இறக்கி சென்றதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இறக்கியவுடன் புதிய ஊர் என்பதால் எங்கே செல்வது என செய்வதறியாது வரிசையாக ECR சாலையில் அமர்ந்திருந்த காட்சியை தத்ரூபமாக படம்பிடித்து அனுப்பி இருக்கார் பைஷல் !

நகராட்சியின் கவனத்திற்கு குளிர் காலங்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகிவிடும் இதனை கருத்தில் கொண்டு நாய்களுக்கு உரிய இனப்பெருக்க தடைக்கான ஊசியை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img