Monday, May 6, 2024

அதிரை மக்களுக்கு தென்னக ரயில்வே கொடுத்த புஸ்வானம் – சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான் நிறுத்தமா?

Share post:

Date:

- Advertisement -

தீபாவளி சிறப்பு ரயிலாக வண்டி எண் 06070/06069 திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் இரண்டு மார்க்கத்திலும் இயக்க உள்ளதாக அறிவிப்பு ஆனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் அதிகாலை 5 .15மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என குறிப்பிட்டு இருக்கிறது.இதில் அதிராம்பட்டினம்,முத்துப்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட ஊர்களுக்கு நிறுத்தம் கிடைத்திருக்கிறது.

வரவேற்ககூடிய விடயம் என்றாலும் அவ்வப்போது விழாக்கால ரயில்களை மட்டும் நிறுத்தி செல்வது வேதனை அளிப்பதாக ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி,பொங்கள், கிருஸ்துமஸ்,ரம்ஜான் காலங்களில் மட்டும் அதிரையர்கள் பயணங்கள் மேற் கொள்வதில்லை கடந்த கால ரயில்வே வருவாய்களை புரட்டிப்பார்த்தால் அதிரை மக்கள் எவ்வாறு ரயிலை பயன்படுத்தி உள்ளனர் என்பது புலப்படும்.

எனவே அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் நியாமான கோரிக்கையான காரைக்குடி -எழும்பூர் நிரந்தர ரயில் ஒன்றை இயக்க வேண்டும் என்பதும் அந்த ட்ரெயின் அதிரையில் நின்று செல்ல வேண்டும் என்பதேயாகும்.

நிறைவேற்றுமா தென்னக ரயில்வே?

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...