Home » அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் உரிமைகள் பறிபோகும் என்றும், 100நாள் வேலை திட்டம்,இலவச மின்சாரம்,வீட்டு வரி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகள் ஆடு மாடு கோழி வளர்ப்பது படிப்படியாக தடைப்படும் எனவும் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அந்த சலுகைகள் இனி கிடைக்காது எனவும் அந்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழவேனிற்காடு கிராமத்தை இணைக்க முன்னதாக அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 4 கிராமங்களும் இணைதிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter