தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உதுப்பினருமான கா. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை மற்றும் தொக்காலிக்காடு ஆகிய ஊராட்சிகளின் சில பகுதிகளை இணைப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் (நேற்று) அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கண்ட ஊராட் சிகளில் உள்ள பொதுமக்களின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் எம்.எல்.ஏ குறிப்பிட்டு இருக்கிறார்.
ஊராட்சி மன்றங்களின் தீர்மானம் இல்லாமலோ, பொதுமக்களின் கருத்து கேட்காமலோ அரசு எந்த முடிவும் எடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு அது வரை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அமைதி காக்க கேட்டுக்கொள்வதாக கா.அண்ணாத்துரை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.