அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே சென்ற திருடன், மேஜை மீதுள்ள செல்போனை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
போனை காணாமல் தவித்த அப்பெண் CCTV காட்சியை வைத்து திருடனை அடையாளப்படுத்தியது.
இதனை அடுத்து CCTV காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை ஃபைசல் பிடித்து இருக்கிறார். அப்போது அவரிடம் இன்னொரு செல்போன் கூடுதலாக இருந்துள்ளன.
அதனை கைப்பற்றிய அவர் உரியவரிடம் ஒப்படைக்க காத்திருக்கிறார்.
படத்தில் காணப்படும் செல்போனின் உரியவர் தகுந்த அடையாளங்களை கூறி வாங்கி செல்ல கெட்டு கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட திருடனிடம் உரிய முறையில் விசாரித்ததின் அடிப்படையில் மதிய நேரங்களில் பிச்சை எடுப்பது போல் நடித்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தன.
பசி என்ற ஒத்த வார்த்தையால் அவரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் எச்சரித்து அனுப்பி வைத்ததாக ஃபைசல் நம்மிடம் கூறினார் .