Wednesday, February 19, 2025

பதற்றத்தில் கேரளா மாநிலம்!!பட்டப்பகலில் 6 வயது குழந்தையை கடத்திய மர்ம கும்பல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நேற்று(27/11/2023) மாலை 6:30மணியளவில் தனது சகோதரனுடன் டியூஷன் சென்று வீடு திரும்பிய அபிஜெல் சாரா என்ற 6 வயது குழந்தையை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஹோண்டா அமெஸ் காரில் மர்ம கும்பல் ஒன்று கடத்திசென்றுள்ளது.

இந்நிலையில் அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒரு பெண் குழந்தையின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10லட்சம் ரூபாய் நாளை(28/11/2023) காலை 10மணிக்குள் வேண்டும் என்றும் அப்படி பணத்தை கொடுத்தால் குழந்தையை தங்களின் வீட்டிலேயே வந்து விட்டுவிடுவதாக பேசியுள்ளார். பணம் உடனடியாக கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகும் அந்த கும்பல் வேறு எந்த தகவலும் கூறலாம் தொலைபேசியை துண்டித்துள்ளது.

தற்பொழுது வரை அந்த மர்ம கும்பல் யாரென்று தெரியாததாலும் குழந்தையை மீட்கும் முயற்சியிலும் கேரளா மாநிலம் முழுவதும் அவசர நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபோன்ற கடத்தல் சம்பவம் கேரளா கொல்லம் பகுதியில் அரங்கேறியது இதுவே முதல்முறையாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

மேலும் குழந்தை குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி கேரளா மாநில காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img