இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவரும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான டாக்டர். அம்பேத்கரின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளை நினைவு கூறும் விதமாக இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமூகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக அதிரை முத்தம்மாள் தெரு இளைஞர்கள் ஜெயசூர்யா, திவாகர், திருமாயவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வு குறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய கால சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், சட்டத்திட்டங்களையும் அனைத்து இளைஞர்களும் அறிந்து அவ்வழியில் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தனர்.