அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.
இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பாதசாரிகள் மீது நிலைத்தடுமாறி மோதி விடுகின்றனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் பொருட்சேதமும் உடல் உறுப்புகள் சேதமும் நிச்சயமாகிறது. இதில் உச்ச கட்டமாக உயிர்பலிகளும் நடக்கத்தான் செய்கின்றன.
இதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி,இயக்க கூட்டமைப்பினர் சட்ட ரீதியிலான நடவடிக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இருந்த போதிலும் வரும் வெள்ளியன்று அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட அனைத்து ஜும்ஆக்களிலும் குத்பா பேரூரையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரசங்கத்தை அமைத்து கொள்ள சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.