அதிராம்பட்டினம் ஜாவியால் எதிர்புறம் தக்வா பள்ளியின் ஆட்டோ நிறுத்தம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமாக இணைந்து செயல்படுகிறார்கள் இதற்கு நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
எதிர்புறம் பெண்கள் மேல் நிலை பள்ளி உள்ளதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் இணைய விரும்பாத சிலர் அருகில் ஒரு புதிய சங்கத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூரார் விறகுக்கடை ஹாஜா முழு ஆதரவு தெரிவித்து AITUC ஆட்டோ நிறுத்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பதாகை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள். எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தக்வா பள்ளியின் ஆட்டோ ஓட்டுநர்கள் போர்கொடி தூக்கி சம்பந்தப்பட்ட ஜமாத் நிர்வாகத்திடம் முறையிட்டு உள்ளனர்.
ஜமாத் நிர்வாகம் கோட்டூராரிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அவர் இப்போதைக்கு, எதுவும் செய்ய இயலாது கோட்டுரான் தோற்று விட்டதாக ஆகிவிடும் தட்டி கழித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட பழைய ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனையும் மீறி புதிய ஆட்டோ நிறுத்த திறப்பு விழாவிற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.
பெண்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் புதிய ஆட்டோ நிறுத்தம் என்பது புதிய சிக்கலை உருவக்கும் எனவும், இதனை காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.