அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு ஊரில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
நாளை வியாழக்கிழமை(29/02/2024) முதல் 7 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் துவக்க விழாவில் அதிரையைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பணிகளுக்கான முதல் நாள் செலவை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மீதம் இருக்கக்கூடிய நாட்களுக்கு ஆகக்கூடிய செலவினை அதிரையில் உள்ள ஜமாஅத்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், செல்வந்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கைஃபா அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிகழ்வு நடைபெறும் இடம் : கடற்கரை சாலை, ரயில்வே கேட் அருகில்
இங்ஙனம்,
அதிரை கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடற்கரைத்தெரு, அதிராம்பட்டினம்