அதிராம்பட்டினம் நகரின் சில இடங்களில் இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழைய சாலையின் தூசுக்களை ஊதிவிட்டு அதன் மேலே ஒரு இஞ்ச் அளவிற்கு இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
ஒரே நாளுக்குள் இச்சாலை பணிகளை முடித்து அடுத்த பணிக்கு சென்று விடுகிறார்கள்.
இதே போன்ற சாலைகள், உதிர்ந்து மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் நிலை உருவாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிறுக்கி தள்ளுகிறார்கள்.பல கோடிகள் செலவிடப்பட்டும் சாலைகள், வீணாகி வருவதை கவலையாக பதிந்து வருகின்றனர்.
அதுபோன்ற சாலையில் ஏற்பட்ட விபத்தொன்றிற்கு சாலையில் புதிய சாலையில் உதிர்ந்த கற்கள்தான் காரணமாகியுள்ளன.
அதிராம்பட்டினம் கடைதெருவில் அவசர கதியில் போடப்பட்ட ஸ்டிக்கர் சாலையில், சறுக்கி விழுந்த ஒருவர் கைகளிக் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனை சென்றதாக அருகில் இருந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.