நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் நிகழ்வு மார்ச் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அறிந்திட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வேட்புமனு அளித்தவர்கள் தங்களின் ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களையெல்லாம் நேர்கானலுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளார்.