Wednesday, February 19, 2025

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று பிறை தென்படாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று 30வது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று மாலை ஷவ்வால் 1ம் பிறை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது. அதனடிப்படையில் நாளை அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு, ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான. அப்துல் காதர் அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img