Sunday, February 1, 2026

அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இக்குழந்தையை வீசி சென்றது யார் என போலிசார் விசாரனையில் தம்பிக்கோட்டை வடகாடு வீரையன் மகள் மீனா என்பதும் தெரியவந்தது. மீனாவிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் மாரி முத்துவும் காதலித்து வந்ததும் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் குளத்தில் வீசப்பட்டதாக மீனா ஒப்பு கொண்டுள்ளார்.

இக்குழந்தைக்கு காரணமானவர் மாரிமுத்துதான் எனவும், தெரிவித்திருக்கிறார்.

இதனை மாரிமுத்து மறுத்ததாக கூறப்படுகிறது,

இந்தநிலையில், பட்டுக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் கண்ணகி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், வி.ஏ.ஓ. சுந்தரி, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் முன்னிலையில் மரபணு ஆய்வுக்காக அதிராம்பட்டினத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img