Wednesday, March 18, 2026

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி – களத்திற்கு வந்த SDPI.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட கடைதெரு கிராணி முக்கம் அருகே சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து ரோட்டை சூழ்ந்திருந்தன, இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் முகநூலில் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அதிரை எக்ஸ்பிரஸ் காணொளியுடன் செய்தியாக வெளியிட்டது காட்டுத்தீ போல பரவியது. இந்த செய்தி அதிகார மட்டத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதன் பின் சுதாரித்த 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் நகராட்சிக்கு புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, வார்டு பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் SDPI கட்சியினர் துணை சேர்மன் இராம குணசேகரன் உத்தரவின் பேரில் நாளை காலை தற்காலிகமாக சாலையை சரி செய்து தருவதுடன், விரைவில் முறையாக டெண்டர் வைக்கப்பட்டு வடிகால் உள்ளிட்ட சாலை வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக அஸ்லம் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img