Saturday, December 13, 2025

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து மக்கள் அவதி.

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டின் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த மழை பெருமளவில் தேங்கி நின்று, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல நாட்களாக மழை நீர் குறையாததால், வீதிகள் மட்டுமன்றி வீடுகளின் முன்புறங்களும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

அப்பகுதி மக்களின் கூறுகையில், நீண்டநாளாகக் கோரிக்கை வைத்தும் சரியான வடிகால் அமைப்பு செய்யப்பட்டாதலால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்தப் பிரச்சனை தொடர்வதாக கூறுகின்றனர். மழைநீர் வெளியேற்றப் போதிய கால்வாய்கள் இல்லாததால், குடியிருப்பு பகுதி முழுவதும் சதுப்பு நிலமாக மாறியுள்ளதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், தொடர்ந்து தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் நுழைவது அதிகரித்துள்ளதாகவும், மக்கள் கவலைத் தெரிவித்தனர். கொசு பரவல் அதிகரித்து, நோய் தொற்றும் அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வரிவசூலுக்கு காட்டும் அக்கறையை மக்கள் நலனிலும் காட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்,மேலும் உடனடியாக வடிகால் வசதிகளை மேம்படுத்தி, மழைநீரை அகற்றும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img