Tuesday, February 3, 2026

அதிரையில் ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் மற்றும் காவல்துறை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாமடம் பகுதியில் உள்ள சவுக்கு காட்டில் ஒரு சில தினங்களுக்கு முன்பு 50வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து, அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் அந்த சடலம் அரசு மருத்துவமனை பிணவரைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த நபர் யார் என்று அடையாளம் காண காவல் துறையினர் முயற்சித்தனர். இந்நிலையில் இன்று வரை அவருடைய சொந்தங்கள் என்று கூற யாரும்வராததாலும் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அதிரை CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் CBD நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்களின் முன்னிலையில் மற்றும் அதிரை காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் இன்று(20/01/2018) மாலை அடக்கம்செய்தனர்.

இந்நிகழ்வின் போது ஆரிப், சமீர், பஹத், அஜ்மீர், ரியாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img