தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கற்காவயல் மனோர பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று(22/02/2018) கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் காளை மாடுகள், பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது, சினை பார்ப்பது மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில், கிராமங்களில் சிறப்பாக முறையில் மாடுகளை பாதுகாக்கும் மற்றும் நாட்டு மாடுகள் வளர்க்கும் நபர்களுக்கு சிறப்பு கௌரவ பரிசுகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொண்டு பரிசோதனை பெற்றனர்.
மாடுகள் மட்டுமின்றி வீட்டு செல்ல பிராணிகளுக்கும் பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில்,கோட்டை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் திரு.மகேஷ் பாபு, மாவட்ட துணை ஆளுநர்,கோட்டை ரோட்டரி சங்க தலைவர் அன்பு மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.