தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் நிறைந்த அழகிய ஊராகும்.
இந்த அதிரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் செட்டி தெரு பகுதியில் இன்று(11/05/2018) அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) திறக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது.
இந்த பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் அதிரை அனைத்து பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இறுதியாக இம்மை மற்றும் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிராத்தனை(துஆ) செய்யும் நிகழ்வு நடைபெற்றது.