Sunday, February 1, 2026

திருச்சி ஏர்போர்ட்டில் பார்க்கிங் கொள்ளை!மக்களே..உஷார்..உஷார்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

திருச்சி ஏர்போர்ட்வாயிலில் ஒரு போக்குடன் சிலர் நின்று வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் செய்துகொண்டிருப்பார்கள். இதனை அங்கு செல்லும் அனைவரும் பார்த்திருப்போம்.

ஏர்போர்ட் செல்லும் அனைவரும் அவர்களுக்கு கப்பம் காட்டாமல் செல்ல முடியாது.

ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் உங்களிடம் வசூலிப்பது 5நிமிடங்களுக்கு மேல் நீங்கள் உங்கள் வாகனங்களை அந்த பார்க்கிங்கில் நிறுத்தினால் மட்டும் கொடுக்க வேண்டிய 40,60,80 என்ற தொகையை, மாறாக ஏர்போர்ட் வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கும் கொள்ளை கூட்டம் தான் அது…

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் மக்களே, நீங்கள் உடனே இறக்கிவிட் செல்பவர்கள் என்றால் அவர்களிடம் 5நிமிடத்திற்கான ஒரு சிலிப்பை மட்டும் வாங்கி கொள்ளுங்கள், 5நிமிடம் மேல் நீங்கள் அந்த பார்க்கிங்கில் நின்றால் வெளியேறும் பகுதியில் இருப்பவர்களிடம் பணம் கொடுத்து பார்க்கிங் சிலிப் வாங்கிவிட்டு வெளியேறிவிடலாம்.

நீங்கள் வாகனங்களுடன் ஏற்ற வருபவர்கள் என்றால் அவர்களை ஏர்போர்ட் பகுதியில் இறக்கிவிட்டு விட்டு உடனே வெளியேறி ஏர்போர்ட் வெளியே காத்திருந்தாள் நீங்கள் 5நிமிடம் வாங்கிய சிலிப் மட்டுமே போதும்,

இறக்க வருபவர்கள் என்றால் 5நிமிடத்திற்குள் இறக்கிவிட்டு விட்டு நீங்கள் வெளியேறிவிடுங்கள்.

இதனை சொல்லாமல் வருபவர்கள் அனைவரிடமும் அங்குள்ள பார்க்கிங்க் பணியாளர்கள் வசூலிப்பது மிகப்பெரிய கொள்ளை அல்லவா…?

மேலதிக விபரங்களுக்கு பார்க்கிங்க் சூப்ரவைசர் கிருஷ்ணன் : 9655506383

(கொசுறு தகவல் : ஏர்போர்ட் பார்க்கிங் பகுதியில் உங்கள் வாகனங்களில் விலையுயர்ந்த பொருட்களை விட்டு செல்லாதீர்கள், கள்ள சாவி போட்டு வாகனங்களை திறக்கும் திருடர்கள் அதிகம் உலாவருவதாக தகவல்..

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img