Saturday, April 27, 2024

வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி…! நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-  கோவை குனியமுத்தூரில் வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார்.

குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர், கணவரின் ஓய்வூதியத் தொகையை பெறுவதற்காக வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தங்கள் வங்கிக் கணக்கில் நஜீமாபேகம் என்பவர் ஏடிஎம். அட்டை பெற்றதாகக் கூறும் அதிகாரிகள், வேறு எந்த தகவலையும் கூறாமல் அலைக்கழிப்பதாக உசேன் பீவி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருவரது வங்கிக் கணக்கிற்கு மற்றொருவர் எப்படி ஏ.டி.எம். வாங்க முடியும் என்ற கேள்வி எழுவதால் இந்த மோசடியில் வங்கிக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....