Thursday, February 5, 2026

தண்ணீரில் தத்தளித்த காந்தி நகர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 7ஆம் வார்டில் உள்ள காந்தி நகரில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த (29.09.2018) வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

இந்த பாலம் பொதுமக்கள் வேலைக்குச் செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும், வாகனங்கள் செல்லவும் முக்கிய நடைப்பாதையாக இருக்கின்றது.

இங்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பாதையில் செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

ஒரு நாள் பெய்த கனமழைக்கே இப்படி ஆகி விட்டது. மழைக்காலங்களில் என்னவாகுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img