Friday, May 3, 2024

கல்லூரி மாணவி இடைநீக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர் அமைப்பு கடும் கண்டனம்…!

Share post:

Date:

- Advertisement -

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உறுதியாக நின்று தூக்குமேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங். ஆங்கிலேய அந்நிய சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய பகத்சிங்கின் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக கோவையில் அரசு கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான மாலதியை அக்கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது கல்வி வளாக ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகவே கேம்பஸ் ஃப்ரண்ட் கருதுகிறது.

இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஸ்தபா விடுதுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தொடர்ந்து கல்லூரி வளாகங்களில் ஜனயாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இத்தகைய செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

அதுமட்டுமின்றி ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றான கல்வி வளாகங்களில் இருக்கும் ஜனநாயகத்தை பின்பற்றி சுதந்திரப்போராட்ட வீரரை நினைவு கூறும் வகையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தியதற்காக இடைநீக்கம் செய்வது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

கோவை அரசு கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு, மாணவி மாலதியின் இடைநீக்கத்தை திரும்பப்பெற்று மீண்டும் கல்லூரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...