Thursday, February 5, 2026

அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மீனவ பேரவை மாநில தலைவர் அன்பழகன் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கல்வி உபகரண பொருட்களை இன்று(ஜன 13) வழங்கினார்.மேலும் அவர் அதிரை எக்ஸ்பிரஸிடம் தெரிவிக்கையில் அரசு வழங்கிய நவாரண பொருட்கள் இதுவரை மக்களுக்கு சென்றடையவில்லை,விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு போதுமான இழப்பீடுகள் தரப்படவில்லை,மேலும் மீனவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக தமிழ்நாடு மீனவ பேரவை இருக்கும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில செயலாளர் AK.தாஜூதீன்,AK.சேக் அப்துல்லா,கள்ளிவயல் மீனவ சங்கத்தை சேர்ந்த கபீர், இப்ராகிம்,கரையூர் தெரு தலைவர் வீரபத்திரன், செயலாளர் JK.குமார்,பொருளாளர் குமரன் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img