Monday, April 29, 2024

முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உடல் நசுங்கி பலி…!

Share post:

Date:

- Advertisement -

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சுந்தரவேல். இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் நகர செயலா ளராக இருந்தார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு கண் பிரச்னை. அதற்காக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரை சந்திக்க முன் அனுமதி வாங்கியிருந்தனர். காலை 9 மணிக்கு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதால் காலையில் 5 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து காரில் கிளம்பினர். காரை அவர்கள் டிரைவர் வீரமணி ஓட்டினார்.

 

கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, கண்டெய்னர் லாரி மீது, கார் மோதியது. மோதிய வேகத்தில் கண்டெய்னரின் அடியில் புகுந்து கார் நசுங்கியது. இதில் சுந்தரவேல், அவர் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்தந்தும் உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட காரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி காரில் இருந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...