Friday, May 3, 2024

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை !

Share post:

Date:

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது வீட்டில் அவரது தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் குமாரை (26) வளர்த்து வந்தார் இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர்

இவர் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் உணவு அருந்தி விட்டு மேல் மாடியில் உறங்க சென்றுள்ளார். நேற்று முழுவதும் மேல்மாடி கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர்.

கதவு திறக்கப்படாததால் தகவலறிந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் குமார்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்தவுடன் மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்து அமைச்சர் சிவி சண்முகம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அதிமுக பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் லோகேஷ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...