Saturday, March 21, 2026

இடத்தை சொல்லுங்க… சிஏஏ விவாதத்துக்கு நாங்க ரெடி – அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பொது விவாதத்துக்கு தாங்கள் தயார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில் பேசிய அமித்ஷா, போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம். சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறவும் மாட்டோம் என்றார்.

மேலு சி.ஏ.ஏ. தொடர்பாக பொது விவாதத்துக்கு அகிலேஷ் யாதவும் மாயாவதியும் வர தயாரா ? என்றும் அமித்ஷா சவால்விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், அமித்ஷாவே விவாதத்துக்கான இடத்தை தேர்வு செய்யட்டும். அவருக்கு சாதகமான டிவி சேனல்கள், தொகுப்பாளர்களையும் அழைக்கட்டும். நாங்கள் விவாதத்துக்கு தயாராக் இருக்கிறோம். மதத்தின் அடிப்படையில் மக்களை பாஜக பிரிக்கிறது என்றார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களால் மத்திய அரசு கதிகலங்கிப் போயுள்ளது. இளைஞர்கள், பெண்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவர்களை விவாதத்துக்கு அழைக்கின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்த இடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img