சென்னை வண்ணாரப்பேட்டை ஷாயின் பாக் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்த சீக்கியர்கள்.
மதநிய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்ததிலிருந்து தொடர் போராட்டங்களை இந்தியாவின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சென்னை, வண்ணாரப்பேட்டையிலும் 20 நாளுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் போராட்டங்களில் பங்கெடுத்த மக்களுக்கு சீக்கியர்கள் சேர்ந்த குழுவினர் உணவை சமைத்து பரிமாறினர்.இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, ஏற்கனவே டெல்லியில் சீக்கியர்கள் உதவி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.