உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி இன்று(03.11.2017) பிற்பகல் 1.30 மணியளவில் முடங்கிவிட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட பல நகரங்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனாலும் இன்னும் பல பகுதிகளில் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர்.