தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று(மே.11) திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுபடுத்த சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி,காய்கறி மற்றும் மளிகை பொருட்களை திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் வழங்கினார்.இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,திமுக பிரதிநிதி அபுதாஹீர் ஆகியோர் பங்கேற்றனர்.