அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இரத்ததானம், வரியவர்களுக்கு உதவி,நாடோடிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள், கொரோனா கால களப்பணிகள் என பல்வேறு சமூக பணிகளை ஜாதி மத இணங்களை கடந்து செய்து வருகின்றனர்.
இப்பணியை தொய்வின்றி தொடர புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று எழுந்த கோரிக்கையை அடுத்து நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பிற்கு A. அப்துல் மாலீக் ஒருங்கிணைப்பாளராகவும், A.ஹசன் தலைவராகவும், T.பைசல் ரஹ்மான் செயலாளராககவும், S.சமீர் அலி துணை செயலாளராகவும், A.முனவ்வர் பொருளாளராகவும் இத்தன்னார்வ அமைப்பிற்கு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இரத்த அவசரத் தேவையுடையோர்களுக்கு தடையில்லாமல் பணி செய்திட 24மணி நேரமும் வாட்ஸ் ஆப் குழுமத்தை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரத்தம் சம்பந்தமான அவசர கால தேவைகளுக்கு தொடர்பு கொள்ள,
சமீர் பின் அகமது – 9787574715
அசார் – 8667886349
அனஸ் அகமது – 8778096145
ஃபாதில் – 9791910938