Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் தற்காலிகமாக பூட்டிவைப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரப்பகுதியில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று. தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 375 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பட்டுக்கோட்டையில் நகரில் மட்டும் இன்று வரை 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 4 பேர்
உயிரிழந்துள்ளனர்.

தொற்று வேகமாக பரவி வருவதாலும், உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதாலும் பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் மிகவம் அச்சத்திலும், கடும் பீதியிலும் உள்ளனர். இதனிடையே இன்று பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 3 இளநிலை உதவியாளர்களும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் இன்று மூடப்பட்டுள்ளது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img