நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட திமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இருவரின் பெயர்கள் மட்டும் அதிகமாக ஒலிக்கிறது.மாஜி திமுக வேட்பாளர் பெயர் மற்றும் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் பெயருமே தான்.இதில் மாஜி வேட்பாளரின் பெயரே பேராவூரணி தொகுதி உடன்பிறப்புகளிடத்தில் அதிகமாவே ஒலிப்பதாகவே நம் சர்வே சொல்கிறது.
அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக கொடியை ஏற்றுமா.? என்று உடன்பிறப்புகள் பெரும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த முறை விட்டதை பிடித்துவிடுவோம் என்றும் வேட்பாளரை அறிவித்தவுடன் பணி செய்ய காத்திருப்பதாகவே திமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.