புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு நிர்வாகத்திற்கான முக்கிய முடிவுகளை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் எடுத்து வருகிறார்.இந்த நிலையில் கொரோனா பரவலால் புதுவையில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபான கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால்துறை வெளியிட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தினம் தினம் உச்சம் அடைந்து வரும் நிலையில் புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் மதுபானக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல் – தமிழகத்திலும் மூடப்படுமா ?
More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





