Friday, May 3, 2024

கூகுள் பே இருந்தாலே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் !

Share post:

Date:

- Advertisement -

இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே ரொக்கப் பணப் புழக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகவே பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடிகிறது. இதற்காக வங்கிக்கு அலைய வேண்டிய தேவை இப்போது இல்லை. இதற்காகவே கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதில் கேஷ் பேக் போன்ற பல்வேறு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னுமொரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷின்களில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே இந்த ஆப் மூலமாகப் பணம் எடுக்கலாம். ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஏற்கெனவே சில வங்கிகள் கொண்டுவந்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளில் இந்த வசதி உள்ளது. ஆனால், இந்த வங்கிகளின் பிரத்தியேகமான மொபைல் ஆப்களின் மூலமாகவே பணம் எடுக்க முடியும். ஆனால் இனி வாடிக்கையாளர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்களைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். 2022 ஏப்ரல் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...