அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 6வது வார்டு வேட்பாளர் இப்ராஹிம் விரைவில் அடுத்த ஐந்தாண்டு வார்டின் வளர்ச்சி திட்ட வரைவேடு ஒன்றை வெளியிட உள்ளதாக 6வது வார்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷஃபிக்கா இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
781 வாக்குகளை கொண்ட 6வார்டில் சுமார் 6 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டெரிவேர் ஷஃபிக்கா இப்ராஹிம் லட்சியம் 50 என்ற அடுத்த ஐந்தாண்டு செயல் திட்ட வரைவு ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகவும்,அதில் இருக்கும் அம்சங்களை தாம் வெற்றி பெற்ற உடன் செயல் வடிவம் கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கிறார்.
இத்திட்டத்தை முழுமையாக செயலடுத்தியதும் நான் சார்ந்துள்ள 6 ஆம் வார்டு,பகுதி மக்கள் நலமுடன் வளம் பெற்று வாழ எமது பணிகள் தொய்வின்றி தொடரும் என்கிறார்.