Thursday, December 4, 2025

SSMG கால்பந்து தொடர் : டை – பிரேக்கரில் திண்டுக்கல் வெற்றி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் கெளதியா 7’s நாகூர் – திண்டுக்கல் அணிகள் களம் கண்டன.

நாகூர் அணி அதிரை ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில் களமிறங்கி ஆட்டத்தின் துவக்கத்தில் தனக்கு கிடைத்த அத்தனை கோல் வாய்ப்புகளையும் வீண் செய்தது.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் ஆடி முடித்தது.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் திண்டுக்கல் அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயனபடுத்தி தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடம் மீதமிருக்கையில் நாகூர் அணி தனது முதல் கோலை அடித்ததும் ஆட்டம் உச்சகட்ட பரபரப்படைவதற்குள் போட்டி 1 – 1 என கோல் கணக்கில் சமநிலையுடன் ஆட்டம் முடிவுற்றது.

இதனால் டை – பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

அதிரை கால்பந்து தொடர் வரலாற்றில் கெளதியா 7’s நாகூர் அணி தனது முதல் நாக்-அவுட் சுற்றிலேயே வெளியேறி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img