மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் சார்பு அணிகளுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர்களாக அதிரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீ.புஷ்பராஜன், ஆசாத் நகரை சார்ந்த எச்.சுபையதுல்லா ஆகியோரை நியமித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே திமுகவின் மாவட்ட பொருளாளராக எஸ்.எச்.அஸ்லம், அக்கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவராக ஜமாலுதீன் ஆகியோர் இருந்து வரும் சூழலில் அதிரையை சார்ந்த மேலும் இரண்டு பேருக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.