Friday, May 17, 2024

அரஃபாத்!

Share post:

Date:

- Advertisement -

வெள்ளுடையில் பாவக்கறை
வெளுக்கும் வண்ணான் துறை

ஆதி பிதாவும் அன்னையும்
சந்தித்த “அருள்மலை”த் திடல்
ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்!

ஒருநிமிடமேனும் தரிபட
நிறைவேறும்
ஹஜ் எனும் பேறு
கருவிலிருந்து பாவக்
கறையின்றி வெளியாகும் சிசு போன்று !

கனவினை மெய்ப்டுத்த
“கலீலுல்லாஹ்”அறிந்த இடம்
“காத்தமுன் நபி” இறுதிப் பேருரையின்
கட்டியம் கூறும் தடம்!

பாலுக்கு அழும்
பச்சிளம் பிள்ளை போல்
பாவமன்னிப்பால் “ஈமானின்”
பசிக்கு அழும் நாள்!

நிறைவான மனத்தினில்
நிம்மதி “ஆக்ஸிஜனாம்”
இறையின் காதலுக்குள்
இணையும் ஆன்மாவாம்!

கண்ணீர்க் கடலாகும்
பாலையின் பெருவெளி
எண்ணங்கள் தெளிவாக்கும்
ஏற்றிடும் “கல்பின்” பேரோளி!

ஆக்கம்;
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்.

குறிப்பு:

“அருள்மலை”= ஜபலர்ரஹமத்

“மஹ்ஷர்” = மறுமையில் விசாரணைத் திடல்

” கலீலுல்லாஹ்”= இறைவனின் நண்பர்

“காத்தமுன் நபி”= இறுதி நபி

“கல்பு”= உள்ளம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...