Sunday, May 19, 2024

அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள வாழைக்குளம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. கோரை புற்களால் படர்ந்து காணப்படும் வாழைக்குளத்தை தூர்வார கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(KAIFA) அமைப்பின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை வாழைக்குளத்தை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. குளத்தை அகலப்படுத்தி சுற்றிலும் கரைகளும் அமைக்கப்பட உள்ளது. அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம், கைஃபா அமைப்பு தூர்வாரும் 190வது குளம் ஆகும்.

இந்நிகழ்வில் கைஃபா அமைப்பின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளருமான கார்த்திகேயன் வேல்சாமி, கைஃபா அமைப்பின் செயலாளர் பிரபாகரன், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர், செயலாளர் ஹாஜா நஸ்ருதீன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் செய்யது முஹம்மது, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், தெருவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....