Saturday, May 18, 2024

குப்பைக்கிடங்காக உருவெடுத்துள்ள MS நகர் 2 ஆவது வார்டு பகுதி.!!  என்ன செய்கிறார் வார்டு கவுன்சிலர்..?

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதி குப்பைக்கிடங்காக உருவெடுத்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் முதல் கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் பூச்சிகளும் அந்த குப்பைக்கிடங்கில் ஊடுருவதால் உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதியில் குப்பைகள் சரிவர பெறப்படுவது இல்லையென்றும், ஊராட்சிக்கு என தனியாக 2 குப்பை அள்ளும் வாகனங்கள் இருந்தும் அதற்கென தனி பணியாளர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் எங்கள் பகுதிக்கு குப்பை அள்ளுவதற்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இவை குறித்து 2 ஆவது வார்டு கவுன்சிலர் தமீம் அவர்களுடைய தாயார் ரஹ்மத் நிஷா எந்த வித நடவடிக்கையும் எடுத்ததில்லை என்றும் எங்கள் பகுதி முன்னேற்றத்திற்க்கோ எந்த ஒரு பணியையும் மக்களுக்காக மேற்கொள்வது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த இடத்தில் கிடக்கும் குப்பைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரெத்தியோக வீடியோ விரைவில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் Youtube பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...