Monday, May 20, 2024

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான பெண்மணி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக IMMK நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அந்த வயதான பெண்மணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக IMMK நிர்வாகிகள் அனுமதித்துள்ளனர். அந்த வயதான பெண்மணியை தர்காவில் இருந்து மீட்கும்பொழுது பணப்பையும் அந்த பையில் கொஞ்சம் பணமும் இருந்துள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த வயதான பெண்மணி உடல்நிலை சாதாரண நிலைக்கு வந்த உடன் அவர்களின் அந்த பணப்பையை ஒப்படைக்கலாம் என எண்ணி ஐமுமுக நிர்வாகிகள் அந்த பணப்பையை பாதுகாத்து வந்துள்ளனர். அந்த பெண்மணியோ எந்த தகவலும் இன்றி மருத்துவமனையில் இருந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த பணப்பை ஐமுமுக நிர்வாகிகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் வயதான பெண்மணி ஒருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்த விட்டதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவியது. இறந்த பெண்மணிக்கு பதிலாக சமீபத்தில் ஐமுமுக நிர்வாகிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி புகைப்படம் பரவியத்தை அறிந்த நிர்வாகிகள் அந்த பெண்மணி குறித்து ஆராய துவங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தில் உள்ள பெண்மணி உயிரோடு நலமாக உள்ளதாக மல்லிப்பட்டினம் பகுதியில் இப்ராஹிம் என்ற நபரிடம் இருந்து வந்த தகவலை தஞ்சை மாவட்ட CBD அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர் அலி உறுதி செய்தார். அதன் பின்னர் இந்த தகவலை ஐமுமுக நிர்வாகி அதிரை கனி அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் அந்த வயதான பெண்மணியின் சத்திரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு ஐமுமுக நிர்வாகிகள் நேரில் சென்றி அந்த பணப்பையை ஒப்படைந்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...