Monday, December 1, 2025

அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது.

வழக்கமான டி20 போட்டியில் இருந்து மாறுபடும் இப்போட்டியில் 20 பந்துகள் குறைவாகவே இப்புதிய தொடரில் வீசப்படும். 15 ஓவர் போட்டியான இதில், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும்.

மேலும் போட்டியை நடத்துவதற்கான இடங்களையும் இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. மான்செஸ்டர், கார்டிஃப், சௌதாம்ப்டன், பிர்மிங்காம், லீட்ஸ், லண்டன் மற்றும் நாட்டிங்காம் ஆகிய இடங்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2003ம் ஆண்டு டி20 போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முன்னாள் வீரர்கள் அப்போட்டிக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்திருப்பது நம்பமுடியாத விஷயமாக அமைந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img