வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
அதிலும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து கண மழை நீடிப்பதினால் கேரளா மாநில மக்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றனர்.
ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒட்டு மொத்தமாக சிக்குண்டு கிடக்கும் கேரள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.
இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக அதிரையில் ஒவ்வொரு பள்ளி ஜும் ஆ விலும் நிதி வசூல் செய்ய உள்ளனர்.
இந்த நிதி வசூலில் தாங்களும் பங்கு கொண்டு கேரள மக்களின் துயர் துடைக்க ஒத்துழைப்பு தருமாறு அதிரை தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.